தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், புயலால் பலத்த காற்று வீசும், மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதோடு கனமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க ஐந்து அமைச்சர்களை நியமித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.