தமிழகத்தில் புயல் தாக்கிய சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் டிசம்பர் 8ஆம் தேதி இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் இரண்டு வார வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் புயல் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதால் இன்று விடுமுறையாக இருந்தாலும் இந்த நான்கு மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.