தமிழகத்தில் புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்ததால் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த நான்கு நாட்களாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இரண்டு தாலுகாக்களிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஆறு தாலுகாக்களிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.