தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கடந்த மூன்று நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு வண்டலூர் மற்றும் திருப்போரூர் ஆகிய 6 தாலுகாக்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய தாலுகாக்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 7ஆம் தேதி இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.