தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து பேருக்கும் தற்போது உள்ள துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.