தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் இன்று மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது . இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக மார்ச் 23ஆம் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.