கேரளாவில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுவார்கள். இதனால் பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது எனவும் அரசு அவசர அலுவல் பணிகளுக்காக கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய செப்டம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.