சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்நிலையில் கீதாவுக்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தனர். இதுகுறித்து கீதா சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலை மோசடி தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதனால் சுந்தரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.