சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகர் கக்கன் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் எண்ணூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வநாதன் தனது மாமன் மகளை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த செல்வநாதனின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வநாதன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வ நாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.