தமிழகத்தில் சமீப காலமாகவே ஆன்லைன் விளையாட்டால் கடன் சுமை தாங்க முடியாமல் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னையை சேர்ந்த கீதா கிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல லட்சங்களை இழந்ததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு மனைவியை தூக்கில் தொங்க சொல்லிவிட்டு மூத்த மகளின் கழுத்தையும் எரித்து கொன்றார். அதன் பிறகு முடிவை மாற்றிக் கொண்டு சிறைக்குச் சென்ற அவர் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறு வயது இளைய மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.