மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு பிரம்மாண்ட மாநாடு என்பது ஏற்கத்தக்கதல்ல என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை காட்டுவதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதில் பிரம்மாண்டம் என எதுவும் கிடையாது.

என் மண் என் மக்கள் நடைபயணத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். ஆனால் அதில் பிரம்மாண்டம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். வயதான இவிகேஎஸ் இளங்கோவன் நடக்க முடியாத அமைச்சர் பொன் முடியும் என்னுடைய நடைபயணம் ஜாதி வெறியை தூண்டுவதாக கூறுவது அவர்களின் இயலாமை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.