சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 279 கோடி மதிப்பில் நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் இடத்திற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது தினமும் 122 ரயில்கள் சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கை 80 ரயில்களாக குறைக்கப்படும்.

எழும்பூரில் இருந்து அல்லது மற்ற ரயில் நிலையங்களில் இருந்து வேளச்சேரி வழித்தடத்தை இணைப்பதற்கு கூடுதல் பேருந்து சேவை தேவைப்படும் என்பதால் வேண்டிய வழித்தடத்தில் கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்குவதற்கு மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் சார்பில் கோரிக்கை விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது