விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் ஜோதி இந்திரன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி(30) என்ற மனைவி உள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. நேற்று மகாலட்சுமி தனது சித்தப்பா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என கூறினார்.

அதற்கு ஜோதிந்திரன் போகக்கூடாது என மறுப்பு தெரிவித்து மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜோதி இந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.