தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு கக்கன் குளத்தில் ராஜகனி(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் ராஜகனி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜகனியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் ராஜகனிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.