தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களிடம் நகை கடனுக்கு அதிக வட்டி வாங்கி தருகிறேன் உள்ளிட்ட பல கவர்ச்சியான அறிவிப்புகளை கூறினார். இதனை நம்பி அதே பகுதியை சேர்ந்த பல பெண்கள் தங்க நகைகளை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் 200 பவுன் தங்க நகைகளை பெற்றுக் கொண்ட அந்த பெண் திடீரென தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.