காரைக்கால் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி சாவித்திரியுடன் மன்னார்குடியில் நடக்கும் உறவினர் வீட்டு கறி விருந்துக்கு காரில் சென்றனர். அந்த காரை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றார் இந்நிலையில் திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் காக்கா கோட்டூர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மயிலாடுதுறை நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தம்பதியும், பேருந்தில் வந்தவர்களும் உயிர்த்தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.