திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மதனாஞ்சேரி பகுதியில் பவுலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கனகராஜ் பெங்களூரில் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கனகராஜ் சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் பங்களா மேடு அருகே தேசிய நெடுஞ்சாலை பூபதி கவுண்டர் தெரு சர்வீஸ் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற டிராக்டர் திடீரென பின்னோக்கி வந்தது.

இதனால் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி கனகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.