திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் செய்தி மக்கள் தொடர்பு இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி மாவட்ட நதிநீர் இணைப்பு திட்ட நில எடுப்பு வருவாய் அலுவலர் சுகன்யா மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டார். நேற்று புதிய மாவட்ட வருவாய் அலுவலராக சுகன்யா பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தாசில்தார்கள், வருவாய் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.