சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லையை சிஎம்டிஏ (CMDA) வரை நீட்டித்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரை ஆட்டோக்களை இயக்கலாம். மேலும், எல்லை தாண்டியதாக இனி சென்னை பர்மிட் ஆட்டோக்களுக்கு அபராதமும் விதிக்கப்படாது. CMDA எல்லை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் ஆட்டோக்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது