அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆர் என் ரவி ஆளுநராக இருந்து தனது பணிகளை செய்தால் பிரச்சினையே கிடையாது. ஆளுநர்கள் அரசியல்வாதிகளாக மாறினால் பிரச்சனை. நம் தமிழ்நாடு ஆளுநர் அரசியல்வாதியாக மாறுகின்ற போக்கை கடைப்பிடித்து வருகின்றார்.

நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்றவர் அங்கு குடிசை வீடுகள் இருக்கின்றன. இதுல தவறு நடந்திருக்கு, அதுல தவறு நடந்திருக்கு குறிப்பிட்டு சுட்டி காட்டினால் அந்த தவறுக்கு யார் பொறுப்பானவர்களோ அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். அவர் பாஜகவின் ஊதுக்குழல் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் என சாடியுள்ளார்.