தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு JEE போன்ற 25க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் அதில் சேர்வதற்கு உரிய வழிமுறைகளை வழங்க வேண்டும். நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.