தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக நவம்பர் ஒன்பதாம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை 10975 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கும் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் வழக்கமாக 6300 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 4675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புறநகர் பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்ட வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. எனவே எந்தெந்த பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையங்களில் இயங்கும் என தெரிந்து மக்கள் அதற்கு ஏற்றது போல தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்.