தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் பதவி உயர்வு பணியிட மாறுதல் போன்றவற்றிற்காக கலந்தாய்வு நடத்தப்படும் . தகுதி பெற்ற ஆசிரியர்களுடைய விவரங்கள் எமிஸ்  இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பிப்பார்கள். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை கலந்தாய்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அரசு பள்ளிகளில் புதிதாக பணியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு குறைந்தது 5 வருடத்திற்கு மாறுதல் கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

மேலும் வருடம் தோறும் ஜூன் 30-ம் தேதிக்குள் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அதன் பிறகு பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.