தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், சிவகங்கை, காஞ்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்யவிருக்கிறது