வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து  வாங்கி வருகிறது.மேலும் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கனமழை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.