நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் பல்கலை.க்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.