தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 13ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் விழுப்புரத்தில் உள்ள செஞ்சி ரங்க பூபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இதில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமிற்கு வருபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களுக்கு  04146 223736 (அ) 04146 226417  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.