பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி காலனி தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோதை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அசோதை பிள்ளையார்குளம் கிராமத்தில் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். மீண்டும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் சுப்பிரமணியன் தனது மாமனார் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அசோதை இங்கு வரவில்லை என கூறியுள்ளனர். இதனால் உறவினர்கள் அசோதையை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சுப்ரமணியன் தா.பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.