பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டா லீலா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதற்காக மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளார். ஆனாலும் அவருக்கு வயிறு வலி அதிகமாக இருந்தது.

நேற்று வலி அதிகமாக இருந்ததால் லீலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று லீலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.