சென்னை மாவட்டத்தில் உள்ள நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சாய் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தி என்ற மாணவி உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு லியோரா ஸ்ரீ(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்தச் சிறுமி மடிப்பாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேடவாக்கம் நன்மங்கலம் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை கீர்த்தி தனது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீர்த்தி இடது பக்கமும், லியோரா ஸ்ரீ வலது பக்கமும் விழுந்தனர். இதனால் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி லியோரா தனது தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்ததும் லாரி டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவர் டேவிட் ராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.