தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனூர் கிராமத்தில் லாரி டிரைவரான சதீஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷுக்கும் தீபிகா(20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக குழந்தை வீட்டில் அழுது கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

அப்போது தீபிகா தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திவ்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.