புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி இன்று பேச தொடங்குவதற்கு முன்பே பாஜகவினர் கூச்சலிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதான் பாஜகவினர் பெண்களை மதிக்கும் முறையா என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் பேசியது இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் #KanimozhiKarunanidhi என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.