மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணைவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 20 ஆம் தேதி அதிமுக, பாமக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து நீடித்து வரும் மறைமுக பேச்சுவார்த்தை தற்போது சமூக உடன்பாடு எட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாமகவுக்கு ஏழு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.