பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஆளுநர் மறுத்தது சட்டமீறல் ஆகும். எனவே ஆளுநருக்கு எதிராக திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு சிறிதும் மரியாதை அளிக்காமல் ஆளுநர் மீண்டும் மீண்டும் தவறிழக்கிறார். ஆளுநராக இருக்கும் தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.