தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளில் மதிப்பெண் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் தட்டச்சர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc தெரிவித்துள்ளது. நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்ற வருகிறது. இந்தப் பணி முடிய செப்டம்பர் 11 கடைசி நாள் என்பதால் சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்காதவர்கள் டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் கலந்து கொள்ளலாம் எனவும் தேர்வர்கள் தங்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே தமிழக மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவ உதவியாளர் பதவிக்கு நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக CV Memo லிங்க் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சிறை துறையில் ஜெயிலர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக CV Memo லிங்க் வெளியாகி உள்ளது.