சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரூ.100-ல் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒருநாள் சுற்றுலா அட்டை கட்டணம் ரூ.150 வைப்புத்தொகை ரூ.50 திருப்பி ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்களில் சிறப்பு சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். சுற்றுலா அட்டை ஒருநாள் மட்டுமே செல்லும். அட்டையை ஒப்படைத்தவுடன் ரூ.50 வைப்புத்தொகை திருப்பித் தரப்படும் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.