பாமக அதிமுகவோடு கூட்டணி வைக்க உறுதியாகிருந்த நிலையில், திடீரென்று இரவோடு இரவாக பாஜகவோடு கூட்டணி வைத்து டுவிஸ்ட் கொடுத்தது. இந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பாஜகவிற்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு ஜீரோக்கு கீழே தான் போடுவேன் என்று மோசமான விமர்சனத்தை வைத்தவர்கள் தான் பாமகவினர். இப்போ அந்த ஜீரோ இந்த ஜீரோ எல்லாம் ஒன்றாகியிருக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். எனவே பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. எந்த தாக்கமும் இல்லை..