ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் மச்சல் செக்டார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கிறது. இந்நிலையில் சாலையில் பனிப்பொழிவு அதிக அளவில் இருந்ததால் அவ்வழியே ராணுவ வீரர்கள் சென்ற ‌ வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 3 ராணுவ வீரர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.