உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை முதல் பெண்களுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதன்படி இலவச கேஸ் சிலிண்டர்கள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருக்கிறது. இந்த இலவச கேஸ் சிலிண்டர்களை பெறுவதற்கு ஒரு பெண்ணுக்கு 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அதன் பிறகு இலவச கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த, தாழ்த்தப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வின் காரணமாக இலவசமாக 2 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட இருக்கிறது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உத்திரபிரதேசத்தில் குடும்ப தலைவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.