தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நதியா கடந்த 1985-ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவருடன் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு தற்போது இரு மகள்கள் இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த நதியா எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக பட்டாளம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை நதியா நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது தமிழில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதாவது பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி தயாரிக்கும் புதிய படத்தில் நடிகை நதியா நடிக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான இவானா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ரமேஷ் தமிழ்மணி படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபுவும் நடிக்கும் நிலையில் நதியா மற்றும் யோகி பாபு படப்பிடிப்பு தளத்தில் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை நடிகர் யோகி பாபு தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து  தெரிவித்து வருகிறார்கள்.