ஷிம்லாவில் மழைக்காலத்திற்காக குதிரைகளுக்குப் பிரத்யேகமாக ‘ரெயின்கோட்’ அணிவிக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலைப்பிரதேசமான ஷிம்லாவில் மழையின் போது குதிரைகள் நனைந்து நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க, அவற்றின் உரிமையாளர்கள் இந்த நூதனமான முறையைக் கையாண்டுள்ளனர்.

மேலும் வண்ணமயமான ரெயின்கோட்களை அணிந்து, கம்பீரமாகச் செல்லும் இந்தக் குதிரைகளின் காட்சிகள் காண்போரை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன. விலங்குகள் மீது காட்டப்படும் இந்த அக்கறை மற்றும் அன்பை நெட்டிசன்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

“>

இந்நிலையில் வெறும் போக்குவரத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் விலங்குகளை, இவ்வாறு பாதுகாப்பாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்ளும் உரிமையாளர்களின் செயலை, இணையத்தில் பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். இயற்கையின் மாற்றத்திற்கு ஏற்ப, மனிதர்கள் விலங்குகளைக் கவனித்துக்கொள்ளும் இந்த அழகிய முயற்சி, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.