பிரபல சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர் பிரசாத் வேத்பாதக், தனது குடியிருப்பில் மதத் தலைவர்களின் வரவேற்புக்காக, குடியிருப்பாளர்களின் அனுமதி இன்றி வீட்டின் முன் வெள்ளை நிறக் கோடு வரையப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பொது இடங்களில் எவ்வித மாற்றங்களைச் செய்யும்போதும், அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார். இந்தச் சம்பவம் குறித்து தனது வீடியோவில் பேசிய பிரசாத், ஜைன மதத்தைச் சேர்ந்த தனது நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்காகவே இந்த வீடியோவை உருவாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Jain Jihad ! pic.twitter.com/vBeqvV35LR
— Prasad Vedpathak (@prasadvedpathak) June 4, 2026
“>
இந்நிலையில் தனது அனுமதியின்றி அல்லது குடியிருப்பாளர்களின் பொதுவான சம்மதமின்றி, சங்கத்தின் தலைவர் மற்றும் செயலர் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவுக்கு அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
