நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த நாம் சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு வருடமும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 -10% உயர்த்தப்படும்.

அந்த அடிப்படையில் சென்னையிலுள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் மார்ச் 31ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சென்னையிலிருந்து ஆந்திரா, கோவை, கர்நாடகா, மதுரை போகும் சாலைகளிலுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணமானது அதிகரிக்கப்பட உள்ளது. அதோடு சென்னை புறநகரிலுள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.