தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களின் போது பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தைப்பூச திருவிழா மற்றும் குடியரசு தின விழா அதனை தொடர்ந்து வார இறுதி நாட்கள் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளையுடன் தொடர் விடுமுறை முடிவடைய உள்ளதால் கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு ரயில் 8.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.