நெல்லை மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியை சற்று முன் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் சீமான் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்துள்ளார். அதாவது நெல்லை தொகுதிக்கு பா. சத்யா, தென்காசி தொகுதிக்கு மயிலராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.