சென்னையில் இருந்து கோவைக்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மார்ச் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை இடையே தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தவிர பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் நிலையில் இந்த ரயில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மார்ச் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 7.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு கோவை சென்றடையும். பிறகு இந்த ரயில் மறு மார்க்கமாக அதே நாளில் கோவையிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.