இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பணிபுரிவதற்கு சிறப்பு தேர்வு பயிற்சி பெற விரும்பும் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத் தலைவர் சி.ந மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெர்மன் போன்ற நாடுகளில் செவிலியர் பணியிடங்களுக்கு தேவை பட்டியல் வந்துள்ளது . இதற்காக நேர்காணலில் தகுதி பெற அந்தந்த நாட்டுக்குரிய சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

எனவே இந்த பணிக்கு செல்ல விரும்பும் செவிலிய மாணவ மாணவிகளுக்கு அந்த சிறப்பு தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கூடுதல் தகவல்களை அந்த நிறுவனத்தில் இணையதளம் மற்றும் கைபேசி செயலிலும் தெரிவித்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.