சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கடந்த சில நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.