நாளை அண்ணாமலை தலையில் சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை சரியாக 10 மணியளவில் கமலாலயத்தில் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிமுக கூட்டணியில் விலகியது தொடர்பாகவும்,  அடுத்ததாக தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் டெல்லியில் இருந்து சென்னை திரும்பவில்லை.

அவர் வருவதற்கு காலதாமதம் ஆகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லியில் இருந்து மூத்த தலைவர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும், பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் சந்தோஷ்  இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதால், அவர் வருகைக்கான நேரம்  இன்னும் சரியாக அமையவில்லை என தெரிவிக்கப்பட்டதன் காரணமாக  தற்போது நாளை நடைபெறும் பாஜகவின் ஆயோசனை கூட்டம்  ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது .