கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட் தாலுகாவை சேர்ந்தவர் அனுமந்தப்பா (41). இவர் சமீப காலத்தில் திருட்டு லேப்டாப் ஒன்றை  எடுத்துக்கொண்டு சென்னையில் உள்ள ரிச்சி தெருவிற்கு சென்றுள்ளார். அங்கு பழுதான நிலையில் இருந்த லேப்டாப்பை பழுது நீக்கு விற்று தரும்படி கடைக்காரரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கடைக்காரர் அதனை பழுது நீக்க முடியாது என தெரிவித்துள்ளார். திருட்டு லேப்டாப் என சந்தேகப்பட்டதால் தான் கடைக்காரர் பழுது நீக்க மறுக்கிறார் என்பதை புரிந்து கொண்ட அவர் கடைக்காரரை வழக்கு ஒன்றில் மாட்டி விட முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அவரது கடை முகவரியில் திருவல்லிக்கேணி போலீசாருக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கிறிஸ்துமஸ் தினத்தன்றும், புத்தாண்டு தினத்தன்றும் சென்னையில் பெரிய அளவில் குண்டு வெடிக்கும் எனவும் இதனால் நகரமே தவிர்க்கப்படும் எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடிதம் எழுதிய நபரை கைது செய்ய திருவல்லிக்கேணி போலீசாருக்கு கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அனுமந்தப்பா இதே போல் மற்றொரு மிரட்டல் கடிதத்தை கர்நாடக மாநில போலீசாருக்கும் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து கர்நாடக மாநில போலீசாரும் சென்னை வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரண்டு மாநில போலீசாருக்கும் மிரட்டல் கடிதம் பிடித்த அனுமந்தாபை  போலீசார்  அவரது பாணியை கடைப்பிடித்து அவருக்கு குறி வைத்துள்ளனர். அவரது செல்போன் எண்ணை வைத்து அவரிடம் பேசி போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். அப்போது அப்பாவி கடைக்காரரை மாட்டிவிட முயற்சி அனுமந்தாபின் முயற்சியை போலீஸர் முடிவு எடுத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த திருட்டு லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.